இலங்கை
இராணுவமுகாமுக்கு அருகில் மனித என்புச் சிதிலங்கள் மீட்பு; கற்கோவளத்தில் பரபரப்பு!

இராணுவமுகாமுக்கு அருகில் மனித என்புச் சிதிலங்கள் மீட்பு; கற்கோவளத்தில் பரபரப்பு!
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நீண்டகாலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முகாமுக்கு அருகில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கற்கோவளம் இராணுவமுகாமுக்குக் கிழக்குப் பக்கமாக உள்ள புல்வெளியிலேயே இந்த என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, அந்த என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அந்த மனிதச் சிதிலங்கள் குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காணாமற் போனவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.