Connect with us

உலகம்

ஈரானில் மர்மமான முறையில் காணாமல் போன இந்தியர்கள் மீட்பு!

Published

on

Loading

ஈரானில் மர்மமான முறையில் காணாமல் போன இந்தியர்கள் மீட்பு!

ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் குடிமக்களை மீட்பது குறித்து அறிவித்துள்ளது.

Advertisement

தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள வரமின் நகரில் பொலிஸார் நடத்திய நடவடிக்கையில் இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் (MNA) தெரிவித்துள்ளது.

மே 1 ஆம் திகதி மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தெஹ்ரான் பொலிஸார் தெரிவித்தனர்.

பஞ்சாப்பைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஈரானுக்கு வந்திருந்தனர். உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.

Advertisement

இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள். மே 29 அன்று, இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும்

அவர்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன