Connect with us

இந்தியா

உலகின் உயரமான ரயில்வே பாலம் திறந்துவைத்தார் மோடி!

Published

on

Loading

உலகின் உயரமான ரயில்வே பாலம் திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் இந்திய ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டது. 

இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி  திறந்துவைத்துள்ளார். 

நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மேலும் இதனைத் தொடர்ந்து, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு  சென்றிருந்தார். 

Advertisement

 பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன