இலங்கை
கஞ்சாவுடன் ஒருவர் சுழிபுரத்தில் கைது!

கஞ்சாவுடன் ஒருவர் சுழிபுரத்தில் கைது!
சுழிபுரத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட் டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரி தெரிவித்துள்ளார்.
விசேட ரோந்து நடவடிக் கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிட மான முறையில் நடமாடிய 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை வழிமறித்து சோதனையிட்டபோதே சந்தேகநபரிடமிருந்து ஒரு கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபரை கைதுசெய்து மருத்து வப் பரிசோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் கஞ்சாப் பாவனைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்தது. சந்தேகநபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.