Connect with us

சினிமா

கடன்..வேலையைவிட்ட தந்தை!! சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4 திவினேஷின் கஷ்டங்கள் இதுதான்..

Published

on

Loading

கடன்..வேலையைவிட்ட தந்தை!! சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4 திவினேஷின் கஷ்டங்கள் இதுதான்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. சமீபத்தில் நடந்து முடிந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ன் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு 10 லட்சம் மதிப்பிலான தொகை பரிசாக அளிக்கப்பட்டதுடன் மெல்லிசை இளவரசன் விருதையும் வழங்கினர். சரிகமப நிகழ்ச்சியின் போது தன்னுடைய தந்தைக்கு புது வண்டி வாங்கி வாங்க வேண்டும் என்று சொன்னதும் பாடகர் ஸ்ரீநிவாஸ், அந்த கனவை நிறைவேற்றினார்.திவினேஷ் குறித்து அவரது அப்பா – அம்மா அளித்த பேட்டியொன்றில் பல விஷங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஆரம்பத்தில் திவினேஷ் செலக்ட் ஆவான் என்று நினைக்கவில்லை. எதுவும் தெரியாத இவன் எப்படி பாடுவான் என்ற நம்பிக்கை இல்லை. மெகா ஆடிஷனில் 50 பேர் செலக்ட் ஆனார்கள், அதுவும் பழைய பாடல் பாடினால் எல்லோரும் பிடிக்குமா என்ற பயம் அதிகரித்தது. ஸ்ருதி எனக்கு தெரியாது, எனக்கு சொல்லிக்கொடுங்க என்று டிரைனரிடமே கேட்டான் திவினேஷ்.உள்ளே போனப்பின்பும் போலாமா வேண்டாமா? என்று யோசித்தோம். கடன் வாங்கினோம். திவினேஷுக்காக அவர்(தந்தை) வேலையையே வீட்டுவிட்டார். காசு வாங்கிய இடத்தில் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணாங்க, அங்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூட, பணம் எப்போ வேணாலும் சம்பாதிக்கலாம், அவனை கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க, யாரும் எங்களை கஷ்டப்படுத்தவில்லை.திவினேஷுக்கு எங்கள் கஷ்டம் என்ன என்று தெரியும். அம்மா கஷ்டப்படுகிறாங்களே என்று யோசிப்பான். அதை தெரிந்ததாலே அவன் சரியா பாடினான். நாங்கள் கஷ்டப்படுவதை நினைத்து அவனே புரிந்துக்கொண்டு பாடினான்.நமக்கு நிறைய பிரச்சனை இருக்கு, உன்னால் அது எல்லாம் சரியாக நீ நல்லா பாடு, நீ டிவியில் வரும்போது எங்களுக்கு சந்தோஷம் தான் என்று சொல்வேன். எனக்கு வண்டி எடுத்து கொடுத்தது, இதைவிட பெற்றவர்களுக்கு வேற என்ன வேணும். உள்ளே போனதில் இருந்து எல்லோரும் சப்போர்ட் செய்தார்கள் என்று திவினேஷின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன