Connect with us

டி.வி

சீதாவை நினைத்து பீல் பண்ணும் முத்து.. மீனாவின் ஆசை நிறைவேறும் தருணம்.. டுடே எபிசொட்!

Published

on

Loading

சீதாவை நினைத்து பீல் பண்ணும் முத்து.. மீனாவின் ஆசை நிறைவேறும் தருணம்.. டுடே எபிசொட்!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதா மீனாவுக்கு கொடுத்த பணத்த அருணிட்ட இருந்து தான் வாங்கினவள் என்றதைக் கேட்ட முத்து ரொம்பவே கோபப்படுறார். அதைப் பாத்த அண்ணாமலை இது சீதா சம்மந்தப்பட்ட விஷயம் இதில அவசரப்பட்டு ஒரு முடிவும் எடுக்கக் கூடாது என்கிறார். மேலும் ஒருவேளை மீனா சொன்ன மாதிரி அந்தப் பையன் நல்லவனா இருந்தால் நல்ல வரனை விட்டுட்டு கவலைப்படக்கூடாது என்று சொல்லுறார்.அதைக் கேட்ட மீனா முத்துவைப் பாத்து இதுதான் மாமாவோட அனுபவம் என்கிறார். அதுக்கு முத்து அவன் ஒரு லச்சம் கொடுத்தோன உங்களுக்கு அவன் நல்லவனாத் தெரியுது என்கிறார். மேலும் நான் எடுத்த முடிவில எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லுறார். பின் அண்ணாமலை மீனாவைப் பாத்து முத்து ஒருத்தரையும் இப்படி கெட்டவன் என்று சொல்லமாட்டான் எதுக்கும் வடிவா விசாரிச்சுப் பார் என்கிறார். இதனை அடுத்தது விஜயா மனோஜுக்கு சத்து எதுவும் இல்ல என்று சொல்லி ஜூஸ் செய்து கொடுக்கிறார். அப்ப ரோகிணி வாறதைப் பாத்த விஜயா இதுதான் வீட்டுக்கு வாற நேரமா என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி இண்டைக்கு ஷோரூமில நிறைய பேர் வந்திருந்தாங்க அதுதான் லேட் ஆகிடுச்சு என்கிறார். மேலும் இண்டைக்கு நிறைய காசு வந்தது என்று சொல்லுறார்.அதைத் தொடர்ந்து முத்து காரில வரும் போது ஒரு அம்மா தன்ர பிள்ளை விஷத்தைக் குடிச்சிட்டு ஹெல்ப் பண்ணச் சொல்லுறார். உடனே முத்து அந்தப் பிள்ளைய காரில ஏத்திக் கொண்டு ஹாஸ்பிடலுக்குப் போறார். அப்ப மீனாவும் சீதாவப் பாக்கிறதுக்காக ஹாஸ்பிடல் போய் நிற்கிறார். பின் அந்தப் பிள்ளை விஷம் குடிச்சதுக்கு காரணம், தான் விரும்பின பையனை கல்யாணம் செய்ய வீட்ட சம்மதிக்காதது தான் என்ற விஷயம் முத்துவுக்கு தெரியவருது. இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன