உலகம்
சீனாவில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் சிக்கி ஐவர் பலி!

சீனாவில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் சிக்கி ஐவர் பலி!
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு இரசாயன ஆலையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்ததாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஆறு பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்லைனில் பரவி வரும் காட்சிகள் சம்பவ இடத்திலிருந்து அடர்த்தியான கரும் புகை எழுவதைக் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு 200க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.