Connect with us

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்காக வியூகம் வகுக்கும் பெரமுன!

Published

on

Loading

ஜனாதிபதித் தேர்தலுக்காக வியூகம் வகுக்கும் பெரமுன!

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மொட்டுக் கட்சி அடைந்துள்ள வெற்றியை அடுத்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- 

Advertisement

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நாம் முன்னேறி இருக்கிறோம். நாங்கள் வீழ்ந்துகிடந்த இடத்தில் இருந்து எழுந்தி ருக்கின்றோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதாக இருந்தால் இதைப்போன்று ஐந்து மடங்கு முன்னேற வேண்டும். அதற்கான இலக்கை நாம் தயாரித்து வைத்துள்ளோம். 
கிராமங்களுக்கு அதிகசேவை செய்தது எமது மொட்டுக் கட்சிதான். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் திருடர்கள் என்று சொல்லும் இந்த அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்காக எமது உறுப்பினர்களுடன் இரகசியமாக பேசுகிறது – என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன