Connect with us

இலங்கை

ஜெர்மனி வாழ் இலங்கையர்கயை சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார

Published

on

Loading

ஜெர்மனி வாழ் இலங்கையர்கயை சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை சந்தித்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமான இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதன்போது, ​​ஒரு வளமான அரசுக்கு நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

நாட்டை மேம்படுத்துவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, சரிந்த அரசை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு நிலையான ஆரம்பம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன