இலங்கை
தரமற்ற மருந்து இறக்குமதி ரணிலிடம் தீவிர விசாரணை

தரமற்ற மருந்து இறக்குமதி ரணிலிடம் தீவிர விசாரணை
நாட்டுக்குள் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே ரணிலிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.