Connect with us

சினிமா

துப்பாக்கிய எடுத்துட்டு என் வீட்டுக்கு வர சொல்லுங்க!! பஞ்சாயத்துக்கு வந்த ரஜினியை எகிறிய பாக்யராஜ்

Published

on

Loading

துப்பாக்கிய எடுத்துட்டு என் வீட்டுக்கு வர சொல்லுங்க!! பஞ்சாயத்துக்கு வந்த ரஜினியை எகிறிய பாக்யராஜ்

90களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநரான பாக்யராஜ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் உருவான மிஸ்டர் இந்தியா படத்தி தமிழில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் பாலாஜி விரும்பியதாகவும் இயக்குநர் கே விஜயனை ஃபிக்ஸ் செய்துவிட்டு பாக்யராஜை ஹீரோவாக கமிட்டாக்க முடிவெடுத்து அவரிடம் சென்றாராம்.அப்போது பாக்யராஜ், எதற்காக ரீமேக் படம் புதிதாக ஒரு கதையை உருவாக்கலாமே என சொல்லம் பாலாஜியோ ரீமேக் செய்வதில் உறுதியுடன் இருந்திருக்கிறார். ஒருவழியாக பாக்யராஜும் ஒத்துக்கொள்ள, ஹீரோயினாக மீனாட்சி சேஷாத்ரி புக் செய்யப்பட்டு ஷூட்டிங்கும் ஆரம்பித்தது.ஆனால் ஷூட்டிங்கின் போது இயக்குநர் கே விஜயன் மரணமடைய, பாக்யராஜிடம் சென்ற பாலாஜி, நீங்கள் விஜயனின் மகன் சுந்தர் விஜயனை அருகே வைத்துக்கொண்டு இயக்கத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டு அதற்கும் பாக்யராஜ் ஒத்துக்கொண்டார்.அப்போது படத்தின் சம்பளம் மட்டுமின்றி கோயம்புத்தூர் விநியோக உரிமையையும் பாக்யாஜுக்கு தருவதாக பாலாஜி உறுதியளித்தார். ஆனால் பாலாஜியோ கோவை விநியோகம் செய்யும் செயல்களில் இறங்க, பாக்யராஜுக்கு தெரியவர, இந்த விபகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றது.அது கைக்கொடுக்காததால் ஃபெப்ஸியிடம் இந்த விவகாரம் செல்ல பாலாஜி, தன் செல்வாக்கை பயன்படுத்தி தலைவரையே சிறைக்குள் தள்ளியிருக்கிறார். போராட்டம் வெடித்த நிலையில் வேறுவழியில்லாமல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பாக்யராஜ் சென்றார்.அந்தசமயத்தில் பாஜ்யராஜை சந்திக்க வந்த ராஜினிகாந்த், பாலாஜியுடன் மோதல் எதற்கு? அவர் ஒரு முரட்டு ஆள், துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார் என்று சொல்லியுள்ளார்.உடனே கொதித்த பாகயராஜ், பாலாஜி துப்பாக்கியை எடுத்து நீட்டியவுடன், என்ன பாக்யராஜை சுட்டுவிடுவேனு சொல்கிறீர்கள், நீங்கள் செய்வது பெரிய தவறு, அராஜகம், அநாகரீகம் என்று அவரிடம் சொல்லி இருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு என்னிடம் பஞ்சாயத்து செய்கிறீர்கள்.அவரிடம் துப்பாக்கி இருக்கிறதே, என் வீட்டுக்கு வரசொல்லுங்க என்று பாக்யராஜ் சொல்லியுள்ளார். உடனே ரஜினி, நான் நீங்கள் செய்வது தவறு என்று சொல்லிவிட்டேன் என்று கூறியப்பின் இந்த பிரச்சனையில் தலையிடாமல் ரஜினி ஒதுங்கியிருக்கிறார். பின் இப்பிரச்சனை முடிந்து பாலாஜி உடல்நிலை சரியில்லாத போது மனைவியுடன் நலம் விசாரிக்க சென்றிருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன