இந்தியா
பெங்களூரின் வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் சாவு!

பெங்களூரின் வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் சாவு!
60 இற்கும் மேற்பட்டோர் காயம்; அவர்களில் பலர் கவலைக்கிடம்
ஐ.பி.எல். தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றிய நிலையில், நேற்று இடம்பெற்றவெற்றிப் பேரணியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரின் விதான் சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு திறந்தவெளி பேருந்தில் பெங்களூர் அணி நேற்று உலாவந்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியே 11 பேர் உயிரிழந்துள்ளனர். 60 இற்கும் மேற்பட்டவர்கள் காயம்டைந்த நிலையில், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.