Connect with us

இலங்கை

பேருந்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தருக்கு நடந்த சோகம்!

Published

on

Loading

பேருந்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தருக்கு நடந்த சோகம்!

உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச்  சேர்ந்த விஜயகுமார் ஜெயராசன்  என்ற 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

Advertisement

குறித்த  நபர் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் நண்பகல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி அரச பஸ்ஸில் சென்றுள்ளார்.

இதன்போது அவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளார்.

இவ் மரணம் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன