Connect with us

இலங்கை

பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!

Published

on

Loading

பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!

பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்துத் தெரிவித்தார்.

Advertisement

வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில் அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் கோரினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாணத்தில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன