இந்தியா
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்பதே ஒரு வழி; தமிழக முதலமைச்சர் கருத்து!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்பதே ஒரு வழி; தமிழக முதலமைச்சர் கருத்து!
தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சூரை மீன்பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 1,383 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.