Connect with us

இலங்கை

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று பல மில்லியனுக்கு விற்ற சந்தேகநபர்கள்

Published

on

Loading

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று பல மில்லியனுக்கு விற்ற சந்தேகநபர்கள்

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

விசாரணையின் போது, ​​அனுராதபுரத்தில் வாடகை அடிப்படையில் வேனைப் பெற்று அதை 1.04 மில்லியன் ரூபாய்க்கும், பொரளையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று 9 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் பாணந்துறையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டியவில் வாடகை அடிப்படையில் 2 கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன