Connect with us

இலங்கை

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

Published

on

Loading

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 183 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 156 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 06 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 189 கிராம் 932 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 236 கிராம் 124 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 159 கிராம் 159 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 110  கிராம் 910 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும்,  70730  கஞ்சா செடிகளும், 105 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன