Connect with us

டி.வி

ஹோட்டலில் இருந்து வெளியே துரத்தப்பட்ட பாக்கியா..சிதைந்து போன கனவுகள்…!

Published

on

Loading

ஹோட்டலில் இருந்து வெளியே துரத்தப்பட்ட பாக்கியா..சிதைந்து போன கனவுகள்…!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஹோட்டல் ஓனர் பாக்கியாவைப் பாத்து இங்க இருந்து கிளம்புங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா ஏன் சார் நாங்க என்ன தப்பு செய்தனாங்க என்று கேக்கிறார். இதனை அடுத்து ஓனர் நீங்க ஹோட்டல் ஆரம்பிச்சதில இருந்து தினமும் பிரச்சனை தான் வருது அதுதான் உங்கள இங்க இருந்து போகச் சொன்னான் என்கிறார். பின் பாக்கியா தப்பு பண்ணது கவுன்சிலர் எங்களுக்கு தண்டனை தந்து ஒரு பிரயோசனமும் இல்ல என்று சொல்லுறார். எனினும், ஓனர் அதை காதில வாங்காது பாக்கியாவை வெளியில விட்டு கதவைப் பூட்டுறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி, என்ட புருஷன் கனவில வந்து இந்த ஹோட்டலை மூடினால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்னதாக பாக்கியாவிடம் அழுதுகொண்டு சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா மாமா கண்டிப்பாக அப்புடி எல்லாம் சொல்லியிருக்கமாட்டார் என்றதுடன் வேற யாரும் புரிஞ்சுகொள்ளாட்டியும் பரவாயில்ல நீங்க கூட என்னை புரிஞ்சு கொள்ளாமல் இருக்கிறீங்க என்கிறார்.பின் சுதாகர் இனியாவைப் பாத்து செழியன் வெளியில வரமுடியுமா என்று கேக்கிறார். அதுக்கு இனியா செழியன் நேற்றே வந்திட்டான் என்கிறார். அதைக் கேட்டு சுதாகர் ஷாக் ஆகுறார். அதனை அடுத்து ஆகாஷ் அப்பா கிட்ட எதிர்த்தெல்லாம் கதைக்க கூடாது என்று சொல்லுறார். மறுநாள் பாக்கியா வீட்டிற்கு அமைச்சரிட்ட பேசுறதுக்கு ஹெல்ப் பண்ணவர் வந்து சமைச்சதுக்கான காசு கொடுக்க வந்தனான் என்கிறார். அதனை அடுத்து பாக்கியா ஓனர் வீட்ட போய் ஹோட்டலை திறக்க அனுமதி தாங்க என்று கேக்கிறார். அந்த நேரம் பார்த்து ஓனரின்ட மாப்பிள்ளை வந்து காசை எப்ப தருவீங்க என்று கேக்கிறார். அதைக் கேட்ட பாக்கியா தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுக்கிறார். அதைப் பார்த்த ஓனர் ரொம்பவே சந்தோசப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன