வணிகம்
அவசர தேவைக்கு தனிநபர் கடன் வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்

அவசர தேவைக்கு தனிநபர் கடன் வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்
தனிநபர் கடன் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. மருத்துவ செலவுகள், கல்வி அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடிகள் என பல காரணங்களுக்காக தனிநபர் கடன்கள் பெறப்படுகின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் எண்ணற்ற தளங்கள் என பல இடங்களிலிருந்து சில நிமிடங்களிலேயே கடன் பெறும் வசதிகள் பெருகிவிட்டன. கடன் வாங்கும் முன், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கடனுக்காக விண்ணப்பிக்கும் போதும், கடன் தொகை கிடைத்த பின்னரும் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் உள்ளன. நீங்கள், தனிநபர் கடன் பெற திட்டமிட்டால், இந்த 6 தவறுகளை தவிர்ப்பது நல்லது.1. அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதை தவிர்க்கவும்: தனிநபர் கடன் வழங்குநர்கள் ஏராளமாக உள்ளனர். எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காக அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 2. நம்பகத்தன்மையற்ற கடன் வழங்குநர்களை அணுக வேண்டாம்: அதிக எண்ணிக்கையிலான செயலிகள் மற்றும் தளங்கள் இருந்தாலும், எப்போதும் நம்பகமான வங்கிகள் அல்லது நன்கு அறியப்பட்ட நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. வங்கிகள் பெரும்பாலும் ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் செயல்படுவதால் நம்பகத்தன்மை அதிகம். 3. பதிவு செய்யப்படாத கடன் வழங்குநர்களை அணுக வேண்டாம்: கடன் வழங்கும் நிறுவனம் ஒழுங்குமுறை அமைப்பான ரிசர்வ் வங்கியால் (RBI) பதிவு செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். 4. அத்தியாவசியமற்ற செலவுகளுக்காக கடன் வாங்குவதை தவிர்க்கவும்: கடன் வாங்குவதற்கான காரணம் என்ன என்பதை மதிப்பிடுவது மிகவும் அவசியம். தவிர்க்கக்கூடிய அல்லது அத்தியாவசியமற்ற செலவுகளுக்காக கடன் வாங்க திட்டமிட்டால், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லது. 5. செயலாக்க கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை சரிபார்க்க தவறுதல்:கடன் வாங்குபவர்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, செயலாக்க கட்டணம் (processing fees) மற்றும் பிற மறைமுக கட்டணங்களை கவனிக்க தவறுவது. இந்த கட்டணங்கள் கடனின் மொத்த செலவை அதிகரிக்கும். 6. நுணுக்கமான விதிமுறைகளை கவனமாக படிக்க தவறுதல்: மிக முக்கியமாக, கடன் விண்ணப்பதாரர்கள் கடன் ஒப்பந்தத்தின் அனைத்து நுணுக்கமான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் கவனமாக படிக்க வேண்டும்.ஆகவே, தனிநபர் கடன் பெறும்போது இந்த தவறுகளை தவிர்த்து, கவனமாகவும், பொறுப்புடனும் செயல்பட்டால், நிதி சுமையை குறைத்து, கடனை திருப்பி செலுத்த முடியும்.