இலங்கை
இந்தியாவில் மீண்டுமொரு உலங்குவானூர்தி விபத்து ; 7 பேர் பலி

இந்தியாவில் மீண்டுமொரு உலங்குவானூர்தி விபத்து ; 7 பேர் பலி
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த உலங்குவானூர்தியில் குழந்தை ஒன்று உட்பட 6 பேரும், விமானி ஒருவரும் பயணித்துள்ளனர்.
புனித தலமான கேதார்நாத் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அங்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.