இலங்கை
இந்தியாவில் விருது வென்ற இலங்கையின் பெண் இசையமைப்பாளர்

இந்தியாவில் விருது வென்ற இலங்கையின் பெண் இசையமைப்பாளர்
இலங்கையின் கண்டி, ஹந்தானையைச் சேர்ந்த கல்விஹசான் துலக்ஷினி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, இந்தியாவின் தமிழ் நாட்டில் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இன்று தென்னிந்தியாவின் கோயம்புத்தூரில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவொன்றில், இயக்குநர் பேரரசு மற்றும் நடிகர் வையாபுரி ஆகியோரின் கரங்களினால் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கல்விஹசான் துலக்ஷினிக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்தியாவில் இசையை கற்றுவருவதோடு, அங்கு தனது திறமையை தொடர்ச்சியாக காட்டிவருகின்றார்