Connect with us

இலங்கை

இந்தியா விமான விபத்தின் போதான வீடியோ; சிறுவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

Published

on

Loading

இந்தியா விமான விபத்தின் போதான வீடியோ; சிறுவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

கடந்த வியாழக்கிழமை நடந்த ஏர் இந்தியா விமான விபத்து ஏற்படும் போதான வைரலான வீடியோவை பதிவு செய்த அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் Aryan Asari யிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இந்தியாவின் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போது தான் எதேர்ச்சையாக படம்பிடித்ததாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், இது தனக்கு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அதைச் சமாளிக்க சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

விமானம் இப்படி ‘நெருப்புப் பந்தாக’ மாறும் என்பதை அறியவில்லை. விமானம் தாழ்வாக வந்ததால் தனது வாடகை வீட்டிற்கு அருகில் தனது மொபைல் போனில் விமானத்தைப் படம்பிடித்துக்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

விமானம் தாழ்வாக வருவதை பார்த்து தான் பதிவு செய்துகொண்டிருக்கும் போது 24 வினாடிகளுக்குள் விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறினார்.
‘நான் மிகவும் பயந்தேன். என் சகோதரிக்குதான் முதலில் அந்த வீடியோவைப் காட்டினேன் என்னால் சரியாகப் பேசமுடியவில்லை.

அத்துடன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர்யனின் வாடகை  வீட்டு உரிமையாளர்  ‘சம்பவத்திற்குப் பிறகு நான் சென்ற போது, அவரால் பேச முடியவில்லை என்பதைக் கண்டேன் இரவு முழுவதும் விழித்திருந்தார்.

Advertisement

அவர் எதுவும் சாப்பிடாமல் அமைதியாகிவிட்டார்,’ என்று அவர் கூறினார

இதேவேளை இந்த காணொளி குறித்து சிறுவனிடம் விசாரித்தனர் எனினும் கைதோ அல்லது காவலில் வைக்கப்படவில்லை’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன