இலங்கை
தமிழர் பகுதியொன்றில் யாசக பெண் செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்

தமிழர் பகுதியொன்றில் யாசக பெண் செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்
கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் யாசகப் பெண்ணொருவரை சனிக்கிழமை (14) பொலிஸார் வாழைச்சேனை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரத்தில் யாசகம் கேட்டு வீடுவீடாக சென்ற பெண்ணொருவர் வீட்டிலிருந்த பெண்ணிடம் தேனீர் கேட்டுள்ளார்.
வீட்டிலிருந்த பெண் யாசகப் பெண் மீது பரிதாபம் கொண்டு தேனீர் தயாரிக்கச் சென்ற போது அங்கிருந்த கைபேசியை சூட்சமமாக திருடிச் சென்றுள்ளார்.
இவ்வாறு கைபேசியை திருடிச் சென்ற யாசகப் பெண் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வீ. கெமரா மூலம் அடையாளம் காணப்பட்டார்.
அடையாளம் காணப்பட்ட யாசகப் பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த பெண் திருடிய கைபேசியை பொலிஸார் உரிமையாளரிடம் ஒப்படைத்து, திருடிய பெண்ணுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யாசகம் கேட்டு வரும் சிலரால் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.