Connect with us

இலங்கை

யாழில் தப்பியோடிய ஐவர் ; சைக்கிள்களுடன் மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சி

Published

on

Loading

யாழில் தப்பியோடிய ஐவர் ; சைக்கிள்களுடன் மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – பொன்னாலை காட்டு பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன.

Advertisement

இதன்போது மாதகல் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு 293 கிலோ 497 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன