சினிமா
விபத்தில் சிக்கிய விஜய் டிவி பாப்புலர் சீரியல் ஹீரோ.. தற்போதைய நிலை?

விபத்தில் சிக்கிய விஜய் டிவி பாப்புலர் சீரியல் ஹீரோ.. தற்போதைய நிலை?
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டு 565 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய விஜய் டிவி பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று பொன்னி. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் முடிவடைந்தது.இந்நிலையில், இந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சபரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அது தொடர்பான புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கியதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, இந்த புகைப்படங்களை கண்ட திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வர வேண்டும் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.