Connect with us

இந்தியா

அஹமதாபாத் விமான விபத்து; விபத்துக்குள்ளான விமானத்தை நாங்கள் பராமரித்ததேயில்லை!

Published

on

Loading

அஹமதாபாத் விமான விபத்து; விபத்துக்குள்ளான விமானத்தை நாங்கள் பராமரித்ததேயில்லை!

கைவிரித்தது துருக்கிய நிறுவனம்

இந்தியாவின் அஹமதாபாத் நகரில் விபத்துக்கு உள்ளான ‘போயிங் விமானத்தை தாங்கள் பராமரிக்கவில்லை என்று துருக்கிய நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

அஹமதாபாத் நகரில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் ‘எயார் இந்தியா’ நிறுவனத்துக்குச் சொந்தமான, ‘போயிங்’ ரக விமானம் விபத்துக்கு உள்ளாகியது.

இந்த விமானத்தை, துருக்கியைச் சேர்ந்த நிறுவனமொன்றே பராமரித்தது என்றும், பராமரிப்புப் பணிகளில் சதி இடம்பெற்றிருக்கலாம் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, இந்தியாவுக்குச்சென்று ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த துருக்கி நிறுவனம். விபத்துக்குள்ளான விமானத்தைத் தாங்கள் பராமரிக்கவில்லை என்று கூறியுள்ளது. ‘விபத்துக்கு உள்ளான விமானத்தைப் பராமரித்த நிறுவனம் எது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அது தொடர்பான அறிக்கையிடல் எமக்கு அவசியமற்றது’ என்றும் துருக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமான விபத்தின் போது படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வந்த நால்வர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 270ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன