Connect with us

உலகம்

இங்கிலாந்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு; முதல்வர் வாழ்த்து!

Published

on

Loading

இங்கிலாந்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு; முதல்வர் வாழ்த்து!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 16/06/2025 | Edited on 16/06/2025

 

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரில் தமிழர்களின் முற்றிய ஞானத்தின் அடையாளமாகத் திகழும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா இனிதே நடைபெற்றது

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி சந்தோசம் கொடையாக வழங்கியுள்ள 183-வது திருவள்ளுவர் சிலையினை ஆக்ஸ்போர்ட் மாநகரத்தின் கவுன்சிலர்கள்  ஸ் ரீபன்  வூட் , சூசான் அன்ட் – மாஸ்கெல் கெலன் , முன்னிலையில் விஜிபி உலக தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.  

Advertisement

உடன் பங்கேற்றோர் க்ளைடன்  மேயர் அப்பு தாமோதரன் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்  மல்லை சி ஏ சத்யா மோரிசியஸ் மு அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் ,  லண்டன் சிவா பிள்ளை , ஆஸ்திரேலியா எழுத்தாளர் சந்திரிகா சுப்பிரமணி ,  அவர்கள் , துபாய் தமிழ்ச் சங்கத் தலைவர் மொய்தீன் , கவிஞர் பாட்டழகன் , முனைவர் உலகநாயகி மற்றும் 20 நாடுகளின் பேராளர்கள் பங்கேற்றனர்  

திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில் முனைவர் திரு வி ஜி சந்தோசம் அவர்களை தலைவராக கொண்ட விஜிபி உலகத் தமிழ் சங்கம் தமிழை பரப்பி சிறப்பிக்கும் மேலான பணியை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக உலகின் பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் சிலையினை அமைத்து அன்னை தமிழுக்கு பெருமை சேர்ப்பது போற்றுதலுக்குரியது. 

ஆக்ஸ்போர்ட் நகரில் நிகழும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா  சிறக்கவும் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தமிழ்ப்பணி தொய்வின்றி தொடர எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழுக்கு புகழ் சேர்க்கும் இது போன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் முனைவர் வி ஜி சந்தோசம் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

Advertisement

உலகெங்கிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதே தனது முழுமூச்சியாக செய்து வருகிறேன் இன்று ஆக்ஸ்போர்ட் நகரில் இந்த திருவள்ளுவர் சிலையை நிறுவுவது விஜிபி தமிழ் சங்கத்திற்கும் தமிழ் சார்ந்த மக்களுக்கும் பெருமை சேர்க்கும் என்று வி. ஜி சந்தோசம் கூறினார். பங்கேற்ற பேராளர்களுக்கு திருக்குறள் நூலும் திருவள்ளுவர் சிலையையும் நினைவுப் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  •  “வீடியோ போடுற வேலைலாம் வச்சிகாத…. செத்து போயிடுவ..” – அரசு பேருந்து ஓட்டுநர் மிரட்டல்

  • இங்கிலாந்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு; முதல்வர் வாழ்த்து!

  • “நோயாளிக்கு மருத்துவம் பார்த்த தூய்மைப் பணியாளர்; அரசு மருத்துவமனையில் அவலம்” – அன்புமணி 

  • “முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறார்” – எடப்பாடி பழனிசாமி சாடல்

  • அதிமுக முன்னாள் அமைச்சருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன