Connect with us

பொழுதுபோக்கு

இந்த வீடு வாங்குன காசுல ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆரில் ஏக்கர் கணக்கில் நிலம்… நடிகர் ஆனந்த ராஜ் ஹோம் டூர்!

Published

on

Anand Raj home tour

Loading

இந்த வீடு வாங்குன காசுல ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆரில் ஏக்கர் கணக்கில் நிலம்… நடிகர் ஆனந்த ராஜ் ஹோம் டூர்!

தமிழ் சினிமா பக்கங்களில் நடிகர் ஆனந்த் ராஜுக்கு தவிர்க்க முடியாத ஒரு இடம் இருக்கிறது. குறிப்பாக, வில்லன், ஹீரோ, குணச்சத்திர வேடம், காமெடியன் என்று தான் ஏற்று நடிக்கும் அனைத்து பாத்திரங்களிலும் முத்திரை பதிக்கும் ஆற்றல் கொண்டவர்.இந்நிலையில், நடிகர் ஆனந்த் ராஜின் ஹோம் டூர் தொடர்பான வீடியோ சினி உலகம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலாவதாக அவரது வீட்டில் ஃபோர்ட் நிறுவனத்தின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அந்த வீடியோவில் நாம் பார்க்க முடியும். தனக்கு மிகவும் பிடித்தமான கார் என்று அவற்றை ஆனந்த் ராஜ் குறிப்பிடுகிறார்.இது மட்டுமின்றி தனது வீட்டைச் சுற்றிலும் பல்வேறு மரங்களை ஆனந்த் ராஜ் வளர்த்து வருகிறார். தனது வீட்டை ஏறத்தாழ 1990-களில் ஆனந்த் ராஜ் கட்டியுள்ளார். குறிப்பாக, இந்த வீடு கட்டிய விலைக்கு ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் போன்ற இடங்களில் இடம் வாங்கி இருந்தால், ஏக்கர் கணக்கில் வாங்கி இருக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.நடிகர் ஆனந்த் ராஜ், தனது வீட்டின் ஹால் முழுவதும் சாமி படங்களால் அலங்கரித்து வைத்துள்ளார். இது தவிர ஏராளமான சிலைகளையும் அவர் வைத்திருக்கிறார். இவை அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மினியேச்சர் கார்களின் கலெக்‌ஷனும் ஆனந்த் ராஜ் சேகரித்து வைத்திருக்கிறார்.இவை தவிர தனது திரைப்பயணத்தில் வாங்கிய விருதுகள் அனைத்தையும் வீட்டின் அலமாரியில் வைத்துள்ளார். இவற்றில் ‘பாட்ஷா’, ‘மாநகர காவல்’ போன்ற எத்தனையோ வெள்ளி விழா கண்ட திரைப்படங்களுக்காக கிடைக்கப்பெற்ற விருதுகளும் அடங்கும்.மேலும், விண்டேஜ் ஸ்டைலில் நிறைய நாற்காலிகள் மற்றும் மேஜைகளும் ஆனந்த் ராஜின் வீட்டை அலங்கரிக்கின்றன. இவற்றுடன் நடிகர் சத்யராஜ் தன்னை எடுத்த புகைப்படத்தையும் பத்திரமாக தனது வீட்டில் ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்துள்ளார். அவரது ஹோம் டூரை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன