Connect with us

இந்தியா

ஈரான், காசா மீது தாக்குதல்: ஸ்டாலின், பினராயி விஜயன் இஸ்ரேலுக்கு கண்டனம் விடுத்தது ஏன்?

Published

on

Stalin and Pinarayi

Loading

ஈரான், காசா மீது தாக்குதல்: ஸ்டாலின், பினராயி விஜயன் இஸ்ரேலுக்கு கண்டனம் விடுத்தது ஏன்?

இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அறிக்கையிலிருந்து இந்தியா விலகி நின்றபோதிலும், இரண்டு முக்கிய எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான தமிழகத்தின் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினும், கேரளாவின் சி.பி.ஐ(எம்) மூத்த தலைவர் பினராயி விஜயனும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையே ஒரு போரைத் தூண்டியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் ஜூன் 13 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் குறிப்பிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பரந்த போரைத் தூண்டும் அபாயகரமான ஆக்கிரமிப்புச் செயலாகும். காசா மீது தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள் படும் துயரங்களுடன், இந்த வன்முறைப் பாதையை கண்டிக்க வேண்டும். கட்டுப்பாட்டையும், நீதியையும், அர்த்தமுள்ள இராஜதந்திரத்தையும் உலகம் வலியுறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்தி கூட்டணியின் மறைமுக ஆதரவுடன், இஸ்ரேல் மேற்கு ஆசியா முழுவதும் அதன் அப்பட்டமான மற்றும் ஆக்கிரமிப்பு தாக்குதல்களைத் தொடர்கிறது. இதுபோன்ற அட்டூழியங்கள், குறிப்பாக காசாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிராக அமைதியை விரும்பும், கண்ணியமான எந்த ஒரு நபரும் மௌனமாக இருக்க முடியாது. இப்பகுதியில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.தி.மு.க முக்கிய நிர்வாகி மற்றும் எம்.பி. அருண் நேரு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “மேற்கு ஆசியாவில் மோதல் குறித்த தி.மு.க-வின் நிலைப்பாடு தெளிவானது. பகைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் நம்புகிறோம். அனைத்து பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் நாங்கள் எதிர்க்கும்போது, பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.” என்று கூறினார். மேலும், தனது கட்சி “எந்த மோதல்களையும் நாடாமல் இராஜதந்திர தீர்வுகளைப் பின்பற்ற வேண்டும்” என்று எப்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். “மேற்கு ஆசியாவில் இஸ்ரேலால் நடத்தப்படும் தாக்குதலை ஸ்டாலின் எதிர்க்கிறார்” என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன.பினராயி விஜயனின் நிலைப்பாடு சி.பி.ஐ(எம்)-இன் கொள்கையை பிரதிபலிப்பதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இது “காசாவில் இனப்படுகொலையை” கடுமையாக எதிர்த்துள்ளது.சி.பி.ஐ(எம்) பொலிட்பீரோ வெளியிட்ட அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சர்வதேச அமைப்பு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த தாமதமின்றி தலையிட வேண்டும். இந்த தாக்குதலுக்கு உலகளாவிய கண்டனக் குரலுடன், இந்திய அரசும் தனது குரலை சேர்க்க வேண்டும். உடனடியாக இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்த வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.”ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இந்தியா விலகி நின்ற” முடிவையும் சி.பி.ஐ(எம்) கண்டித்துள்ளது. “இத்தகைய நடவடிக்கைகள் இஸ்ரேலையும் அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பையும் இப்பகுதியில் ஊக்குவிக்க மட்டுமே உதவும்” என்றும் அது கூறியுள்ளது.சி.பி.ஐ(எம்) பொலிட்பீரோ தலைவர் அசோக் தவாலே கூறுகையில், “தோழர் விஜயனின் நிலைப்பாடு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்த சி.பி.ஐ(எம்)-இன் தெளிவான நிலைப்பாட்டிற்கு இணங்க உள்ளது. உண்மையில், இது மேற்கு ஆசிய மோதல் குறித்த இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டிற்கு இணங்க உள்ளது. சி.பி.ஐ(எம்) காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலையையும், ஈரானுக்கு எதிரான அதன் சமீபத்திய தாக்குதலையும் கண்டித்துள்ளது. இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது, ஏனெனில், நமது சுதந்திரக் காலத்திலிருந்தே பாலஸ்தீன போராட்டத்துடன் நாம் மிகவும் ஒத்துப்போகிறோம். கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராகவும், (1967-க்கு முந்தைய எல்லைகளின்படி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தங்கள் மாநில அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளும்) இரு-அரசு தீர்வுதான் நடைமுறைத் தீர்வு என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்,” என்றார்.அரசின் அறிக்கைகள்:இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் எந்த “மோதல் படிகளையும்” தவிர்க்கவும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. “இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் நீட்டிக்க தயாராக உள்ளது,” என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.இஸ்ரேலுக்கு எதிரான SCO-ன் அறிக்கையிலிருந்து விலகி, வெளியுறவு அமைச்சகம், “மேற்கண்ட SCO அறிக்கையின் விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை… மோதல்களைக் குறைக்க பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் மேலும், இந்த திசையில் சர்வதேச அமைப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்று கூறியது.பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், SCO அறிக்கையின் விவாதங்களில் பங்கேற்காததற்காக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தது. காசாவில் போர்நிறுத்தத்திற்கான ஐ.நா. பொதுச் சபை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி நின்றதற்காகவும் மத்திய அரசை, காங்கிரஸ் விமர்சித்தது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை “குழப்பத்தில்” இருப்பதாகக் குற்றம் சாட்டியது. இந்த முடிவு காரணமாக நாடு “கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறி, மேற்கு ஆசியாவில் போர்நிறுத்தம், அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இந்தியா தனது கொள்கை நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டதா என்று கட்சி கேள்வி எழுப்பியது.Nikhila Henry

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன