இலங்கை
தமிழர் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

தமிழர் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவர், கல்மடோ நகர் சம்புகுளம் பகுதியை நிரந்தர பதிவிடமாகவும் ஆறுமுகம் வீதி வட்டக்கட்சியை தற்காலிக வதிவிடமாக கொண்ட 54 வயதுடைய குடும்பஸ்தர் தனபால சிங்கம் குமாரதாஸ் என தெரியவந்துள்ளது.
இறந்தவரின் சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.