இந்தியா
புனேவில் பாலம் இடிந்து விபத்து!

புனேவில் பாலம் இடிந்து விபத்து!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் நேற்று இடிந்து விழுந்துள்ளது.
விடுமுறை நாளான நேற்று, இந்த பாலத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். இதனால், பாரம் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் இந்திராயானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப் படையினர், நான்கு பேரின் உடல்களை மீட்டனர். மேலும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.