இலங்கை
போர் நிறுத்தத்திற்கு தயார் இல்லை ; அதிரடி காட்டிய நெதன்யாகு

போர் நிறுத்தத்திற்கு தயார் இல்லை ; அதிரடி காட்டிய நெதன்யாகு
இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமானிடம் ஈரான் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், போர்நிறுத்தம் எட்டப்படுவது சிக்கலான விடயம் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், சில நேரங்களில் அவர்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்குச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.