Connect with us

இலங்கை

மயிலிட்டி மருத்துவமனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுங்கள்! பிரதேச மக்கள் கோரிக்கை

Published

on

Loading

மயிலிட்டி மருத்துவமனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுங்கள்! பிரதேச மக்கள் கோரிக்கை

மயிலிட்டி ஆரம்ப மருத்துவமனையை தரமுயர்த்துமாறு தெல்லிப்பழைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;
மயிலிட்டி மருத்துவமனை 24 மணிநேரசேவையை வழங்கும்முகமாக தரமுயர்த்தப்படவேண்டும். தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மாத்திரம் மக்கள் நம்பி இருக்காது மயிலிட்டி ஆரம்ப மருத்துவமனையையும் மேம்படுத்த வேண்டும். தெல்லிப்பழை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவில் காணப்படுகின்ற அம்புலன்ஸ் வண்டி ஒன்றை மயிலிட்டி மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் உயிராபத்துகள் ஏற்படுகின்ற பொழுது அதனைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதுதொடர்பில் கவனத்தில் எடுப்பதாக தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மருத்துவர் பவானந்தராஜா தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன