இலங்கை
மீண்டும் ஏறும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் கவலை

மீண்டும் ஏறும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் கவலை
பொதுவாகவே பணக்கார முதல் நடுத்தர மக்கள் வரை தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 2025 இல் தங்கம் வரலாரு காணாத உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த நாட்களில் தங்கம் விலை சிறிது குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10,168 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 81,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் கிராமுக்கு 17 குறைந்து ரூ. 10,151 க்கும், ஒரு சவரன் 81,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் நேற்று 18 காரட் தங்கம் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.7, 670 க்கும், சவரன் ரூ.61,360 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,660 க்கும், ஒரு சவரன் ரூ.61,280 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை நிலவரம் பொறுத்த வரையிலும் கிராமுக்கு 0.10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.119.90 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,990 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.