Connect with us

இலங்கை

மீண்டும் நடுவானில் எயர் இந்தியா விமானத்தில் கோளாறு

Published

on

Loading

மீண்டும் நடுவானில் எயர் இந்தியா விமானத்தில் கோளாறு

  ஹொங்கொங்கிலிருந்து இந்தியாவின் புதுடில்லி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எயர் இந்தியா (Boeing 787-8 Dreamliner AI315) விமானமொன்று நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஹொங்கொங் திரும்பியுள்ளது.

நடுவானில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்ததை தொடர்ந்து ஹொங்கொங்கிற்கு விமானத்தை மீண்டும் திருப்பியுள்ளார்.

Advertisement

விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது, தொழில்நுட்ப கோளாறு குறித்த மேலதிக தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை ஜெய்ப்பூரில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி செயல்படாததால் கடந்த 5 மணி நேரமாக வியர்க்க விறுவிறுக்க விமானத்தில் பயணம் செய்து வந்ததாகவும், குறைகளை கேட்கக் கூட விமான சிப்பந்திகள் வரவில்லை என்றும் பயணி ஒருவர் சமூக வலைதளத்தில்  தெரிவித்துள்ளார்.

காலை லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுவானில் எரிபொருள் வெளியேற்றப்பட்டு திருப்பிவிடப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை – லண்டன் விமானமும் மறுமார்க்கமாக ரத்து செய்யப்பட்டது.

Advertisement

தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் புகாருக்கு உள்ளாகி வருவது  விமான பயணிகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கடந்த வாரம் எயர் இந்தியா விமானம் ஒன்று இந்தியாவில் விபத்துகுள்ளானதில் அதில் பயணித்த 241 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன