இலங்கை
யாழில் திடீரென மயங்கிய ஆணொருவர் உயிரிழப்பு!

யாழில் திடீரென மயங்கிய ஆணொருவர் உயிரிழப்பு!
யாழ். சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; இவர் கடந்த 14ஆம் திகதி உணவருந்திவிட்டு இருந்த வேளை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டு முற்றத்திற்கு வந்தவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றையதினம் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனாமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.