Connect with us

இலங்கை

விகாரையில் கைவரிசையை காட்டிய இளம் தேரர் உட்பட்ட குழு

Published

on

Loading

விகாரையில் கைவரிசையை காட்டிய இளம் தேரர் உட்பட்ட குழு

மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த புராதன முகமூடிகளை திருடியதாக கூறப்படும் தேரர் உட்பட மூவர் வெலிகம பொலிஸாரால் நேற்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த புராதன முகமூடிகள் திருடப்பட்டுள்ளதாக குறித்த விகாரையின் விகாராதிபதி கடந்த 07 ஆம் திகதி வெலிகம பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

24 வயதுடைய தேரரும், 62 மற்றும் 42 வயதுடைய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தேரர் குறித்த விகாரையில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன