இலங்கை
180 மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு!

180 மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு!
மத்திய மருந்தகங்களில் வலி நிவாரணிகள், மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் உட்பட 180 அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு முக்கியமான புற்றுநோய் மருந்து பல மாதங்களாகப் பற்றாக்குறையாக உள்ளது. இது நோயாளிகளின் சிகிச்சையை மட்டுப்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.