Connect with us

இலங்கை

60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து நால்வர் பலி

Published

on

Loading

60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து நால்வர் பலி

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குண்டமாலா கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 10 – 15 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 6 பேர் காப்பற்றப்பட்டிருக்கின்றனர்.

Advertisement

60 ஆண்டு பழமையான இந்தப் பாலத்தின் மேல், விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கூடியிருக்கின்றனர். அதனால், இந்த பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் என்.டி.ஆர்.எப். வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம் அங்கிருந்த பொதுமக்களைப் பத்திரமாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு அவசர தேவைக்கு மருத்துவ ஆம்புலன்ஸ்கள் மற்றும் முதலுதவிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாலம் இடிந்து விழுந்த இடத்திற்கு மகாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன