Connect with us

இலங்கை

இஸ்ரேலிய வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான விசேட அறிவிப்பு

Published

on

Loading

இஸ்ரேலிய வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது செயல்படவில்லை என்று இஸ்ரேலில் உள்ள மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு (PIBA) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேலை தேடுபவர்களுக்கும், இஸ்ரேலில் வேலைகளுக்கு இலங்கையர்களை பரிந்துரைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் மற்றும் வேலைக்கு இஸ்ரேலுக்குத் திரும்பத் திட்டமிடும் இலங்கையர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தின் பிரிவு 39 (1) (அ) சரத்தின்படி,

வேலை வாய்ப்பு பணியகத்தால் மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலிய வேலைவாய்ப்பிற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படாது என்றும்,

Advertisement

அந்த நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழுவின் (PIBA) அறிவிப்பின் பேரில் எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன