இலங்கை
கொழும்பு வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

கொழும்பு வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!
கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்திய நிபுணருடன் எழுத்தர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மூன்றாம் தரப்பு நபர்கள் ஊடாக மருந்துகளை அதிக விலையில் விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.