சினிமா
“டூரிஸ்ட் பேமிலி” படத்தை ஓடவிடாமல் பண்ணமுடியுமா.? ஜேம்ஸ் வசந்தனின் அதிரடிக் கருத்து!

“டூரிஸ்ட் பேமிலி” படத்தை ஓடவிடாமல் பண்ணமுடியுமா.? ஜேம்ஸ் வசந்தனின் அதிரடிக் கருத்து!
நடிகர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியராகச் செயல்பட்டு வரும் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்று தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திரைப்பட விமர்சனங்கள், விமர்சகர்களின் தாக்கம், சமூக வலைத்தளங்களில் உண்மையான பார்வையாளர்களின் தாக்கம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை நேர்மையாகப் பேசியுள்ளார்.அந்த நேர்காணலில் ஜேம்ஸ் வசந்தன், “ஒரு திரைப்படத்தை விமர்சகர்கள் தவறாக வழிநடத்தலாம். ஓரளவுக்கு கெடுக்க முடியும். அது ஒரு முறை அல்ல, சில முறை நடக்கும். ஆனால் இது ஒருபோதும் நிரந்தரமல்ல. ஒரு நல்ல படத்தை எவ்வளவு நாள் தடுத்து நிறுத்த முடியும்? ஒரு சிறந்த கலைப்படைப்பை ஆழமாக ரசித்த நபர், அதற்கான உண்மையான மதிப்பீட்டை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவர்.” என்றார்.இங்கே அவர் குறிப்பிட்ட ஒரு முக்கிய சம்பவம் “டூரிஸ்ட் பேமிலி” என்ற திரைப்படம் சார்ந்தது. இத்திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், வெளியான சில நாட்களில் அதனை எதிர்த்த பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.ஜேம்ஸ் வசந்தன் அதன்போது, “யாரோ ஒரு வயித்தெரிச்சல் தயாரிப்பாளர், விமர்சகர்களுக்கு காசு கொடுத்து, ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை அழிக்கணும் என்று திட்டமிட்டால், அது முடியுமா? விமர்சகர்களால் ஓரளவுக்கு தடுக்க முடியும் ஆனால் உண்மையை மறைக்கவே முடியாது.” எனவும் தெரிவித்திருந்தார்.