இலங்கை
யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை
யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்குச் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோலுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது எனப் பரப்பப்பட்ட போலியான தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் காரணமாகவே எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், நாட்டில் போதியளவு எரி பொருள்கள் இருப்பில் உள்ளன என்றும், தேவையற்ற வகையில் செயற்கையான தட்டுப் பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று யாழ்.மாவட்டப் பதில் செயலர் ம.பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.