Connect with us

பொழுதுபோக்கு

அந்த மூணு வார்த்தை சொல்லிடுங்களேன்; சீதாவிடம் கெஞ்சிய பார்த்திபன்: முதல் நாளே உருவான சண்டை!

Published

on

Seetha and Parthiban

Loading

அந்த மூணு வார்த்தை சொல்லிடுங்களேன்; சீதாவிடம் கெஞ்சிய பார்த்திபன்: முதல் நாளே உருவான சண்டை!

நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சீதா ஒரு கட்டத்தில் அவரை பிரிந்த நிலையில், முதலில் காதலை யார் சொன்னது என்பது குறித்து நடிகை சீதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நடிகை சீதா, தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவரை தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் பார்த்திபன். பாக்யராஜூவிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன் 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நாயகனாக அறிமுகமானார்.முதலில் புதிய பாதை படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாத சீதா தனது அப்பாவின் வற்புறுத்தலால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் இருவருக்குமே பெரிய வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய படமாக அமைந்த்து. 1990-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 11 வருட இடைவெளியில் கடந்த 2001-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின் சீதா சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் பார்த்திபன். தற்போது, அவர் டீன்ஸ் என் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து ப்ரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து வரும் பார்த்திபன் சீதா குறித்தும் பேசி வருகிறார். இதனிடையே சீதா பார்த்திபனுடனான தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து சில மாதங்களுக்கு முன்பு வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இதில், நான் புதிய பாதை படத்தில் நடிக்கும் போது பார்த்திபனை காதலிக்க தொடங்கினேன். எங்கள் இருவர் மனதிலும் காதல் இருந்தது. ஆனால் நான் முதலில் அவரிடம் காதலை சொல்லவில்லை. அவர்தான் எனக்கு தினமும் போன் பண்ணி அந்த மூன்று வார்த்தையை சொல்லுங்க என்று சொல்லுவார். நான் அதை இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு, ஒருநாள் அவரிடம் என்னுடைய காதலை சொன்னேன். நான் எந்த ஒரு தவறு செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தாலே வீட்டில் மாட்டிக்கொள்வேன்.அதேபோல் நான் போனில் அவரிடம் ஐ லவ் யூ என்று சொல்லும் அந்த நேரத்தில் என்னுடைய அப்பா போனில் கேட்டு விட்டார்.  இதனால் காதலை சொன்ன முதல் நாளே பிரச்சனை தொடங்கிவிட்டது. அதற்கு பிறகு பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. காதலை சொல்லுங்கள் என்று சொன்னது அவர், அதன்பிறகு காதலை சொன்னது நான் என்று சீதா கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன