Connect with us

இலங்கை

இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னை விமான நிலையத்தில் கைது

Published

on

Loading

இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னை விமான நிலையத்தில் கைது

  போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்ற இலங்கையர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 48 வயதுடைய தாயும் 21 வயதுடைய மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைதுசெய்யப்பட்ட தாயும் மகளும் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

இதன்போது இந்திய குடிவரவு அதிகாரிகள், சந்தேக நபர்களான தாயையும் மகளையும் விசாரித்து அவர்களின் கடவுச்சீட்டுகளை சோதனை செய்துள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடம் உள்ள கடவுச்சீட்டுகள் போலியானது எனவும் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட தாயும் மகளும் மேலதிக விசாரணைகளுக்காக சென்னையின் மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன