இலங்கை
இஷாரா செவ்வந்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்

இஷாரா செவ்வந்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்
கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலங்களை வழங்குமாறு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக தேடப்படும் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுவது தொடர்பான அறிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறும் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கியதாகக் கூறப்படும் இஷார செவ்வந்தியைக் கைது செய்வதற்கான தேடுதல் இன்னும் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரியில் கொழும்பு நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக துப்பாக்கிதாரி உட்பட பல சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.