Connect with us

இலங்கை

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த நாமல் ராஜபக்ச

Published

on

Loading

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த நாமல் ராஜபக்ச

   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக இன்று (18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,

பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.

இது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயமாகும்.

Advertisement

சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் நிறைந்த அரசியலுக்கு மாறாக வன்முறை சார்ந்த அரசியல் முறைமை இடம்பெறுவது பாரதூரமான ஒரு விடயம் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன