Connect with us

சினிமா

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4!! டைட்டில் வின்னர் திவினேஷ் பெற்றோரின் மறுப்பக்கம் இதுதான்..

Published

on

Loading

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4!! டைட்டில் வின்னர் திவினேஷ் பெற்றோரின் மறுப்பக்கம் இதுதான்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. சமீபத்தில் நடந்து முடிந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ன் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 10 லட்சம் மதிப்பிலான தொகை பரிசாக அளிக்கப்பட்டதுடன் மெல்லிசை இளவரசன் விருதையும் வழங்கினர்.சரிகமப நிகழ்ச்சியின் போது தன்னுடைய தந்தைக்கு புது வண்டி வாங்கி வாங்க வேண்டும் என்று சொன்னதும் பாடகர் ஸ்ரீநிவாஸ், அந்த கனவை நிறைவேற்றினார். திவினேஷ் குறித்து அவரது அப்பா – அம்மா அளித்த பேட்டியொன்றில் பல விஷங்களை பகிர்ந்துள்ளார்.அதில், மெகா ஆடிஷனுக்கு முந்தின நாள், பெரிய பசங்க கூட சின்ன பையன் பாட வெச்சி ஜெயிக்க முடியாது, போக வேண்டாம்ணு பேசியிருந்தோம். ஆனால், மெகா ஆடிஷனுக்கு காலை 7 மணிக்கு ஷூட்டுக்கு 11 மணிக்கு தான் போனோம். முதல் அப்பா(திவினேஷின் தாத்தா) பாடிட்டு இருப்பாங்க, அதை கேட்டுக்கிட்டு வீட்டில் பாடுவான். ஆரம்பத்தில் கிண்டல் பண்ணிட்டு, அவரைப்போல் பாடுவான், பின் அதையே பாட ஆரம்பிச்சிட்டான்.விஜய் ரசிகர் வேறையா, பிகில் பட காலமே காலமே பாடலை சூப்பரா பாடுவான். அதை நாங்களும் கத்துக்கொடுப்பார். திவினேஷுக்கு எங்கள் கஷ்டம் என்ன என்று தெரியும். அம்மா கஷ்டப்படுகிறாங்களே என்று யோசிப்பான். அதை தெரிந்ததாலே அவன் சரியா பாடினான்.நாங்கள் கஷ்டப்படுவதை நினைத்து அவனே புரிந்துக்கொண்டு பாடினான். நமக்கு நிறைய பிரச்சனை இருக்கு, உன்னால் அது எல்லாம் சரியாக நீ நல்லா பாடு, நீ டிவியில் வரும்போது எங்களுக்கு சந்தோஷம் தான் என்று சொல்வேன்.எனக்கு வண்டி எடுத்து கொடுத்தது, இதைவிட பெற்றவர்களுக்கு வேற என்ன வேணும். உள்ளே போனதில் இருந்து எல்லோரும் சப்போர்ட் செய்தார்கள் என்று திவினேஷின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ன் டைட்டில் வின்னாராகி, தன்னுடைய பெற்றோரை புது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். பல விருதுகள், 10 லட்சம் ரூபாய் பரிசு என திவினேஷ் தமிழ் ரசிகர்களின் மனதை ரொம்பவே ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன