Connect with us

இலங்கை

போர் தொடங்கிவிட்டது ; சீறிப்பாய்ந்த ஹைபர் சோனிக் ஏவுகணை; ஈரான் தலைவர் எச்சரிக்கை!

Published

on

Loading

போர் தொடங்கிவிட்டது ; சீறிப்பாய்ந்த ஹைபர் சோனிக் ஏவுகணை; ஈரான் தலைவர் எச்சரிக்கை!

  இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் தற்போது ஈரான் தனது முதல் ஹைபர் சோனிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் அணு ஆயுத பரிசோதனைகளுக்கு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் இஸ்ரேல் விமானப்படை சமீபத்தில் ஈரானுக்குள் புகுந்து ஈரானிய அணு ஆய்வகங்களை தாக்கி அழித்தது.

Advertisement

இதற்கு பதிலடியாக டெல் அவிவ் நகரை ஈரான் தாக்க, பதிலுக்கு தெஹ்ரானை இஸ்ரேல் தாக்க, இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உயர்மட்ட ராணுவ தளபதி அலி ஷமாத்னி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவர் ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனியின் நண்பர் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஃபத்தா 1 என்ற தங்களது ஹைபர் சோனிக் ஏவுகணையை வீசித் தாக்கியுள்ளது ஈரான்.

Advertisement

இதில் கட்டிடங்கள் சில இடிந்ததுடன், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பேசிய ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி , போர் தொடங்கிவிட்டது. ஸியோனிஸ்டுகளுடன் சமரச பேச்சுக்கு இடமே கிடையாது என சூளுரைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன