Connect with us

சினிமா

அழகான நடிகை!! காதலனுக்காக தற்கொலை செய்து மரணித்த பிரபல நடிகையின் வரலாறு..

Published

on

Loading

அழகான நடிகை!! காதலனுக்காக தற்கொலை செய்து மரணித்த பிரபல நடிகையின் வரலாறு..

தமிழ் சினிமாவின் அழகான நடிகை என்று எடுத்துக்கொண்டால் டாப் லிஸ்ட்டில் இருப்பவர் தான் நடிகை பிரதியுஷா. சிறுவயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிரதியுஷா, தெலுங்கு டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றார். மிஸ் லவ்லி ஸ்மைல் என்ற பட்டத்தை வென்று மிகப்பெரியளவில் ஆந்திரா முழுவதும் பிரபலமானார்.பின் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மோகன்பாபுவுக்கு ஜோடியாக 1998ல் தன்னுடைய 18வது வயதில் அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தன் அழகால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதியுஷாவுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்தன.இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையா இயக்கத்தில் 1999ல் வெளியான மனுநீதி படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தார். சூப்பர் குடும்பம், தவசி, பொன்னான நேரம், கடல்பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் 20 வயதிலேயே பிஸியான நடிகையானார்.5 வருடத்தில் 11 படங்களில் நடித்த பிரதியுஷா, 22 வயதில் தற்கொலை செய்து மரணித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.காதல் மன்னன் படத்தில் நடந்ததை போல் வீட்டில் காதலுக்கு மறுத்த குடும்பத்தினரால் பிரதியுஷாவும் அவரது காதலர் சித்தார்த்தா ரெட்டி என்பவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனார். ஆனால், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரதியுஷா மரணிக்க, காதலன் சித்தார்த்த ரெட்டி உயிர் பிழைத்திருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன